Tuesday, August 27, 2024

சிந்தித்து செயல்படு | தமிழ் கதைகள் | Think Before You Act | Moral Stories

                                                  தமிழ் கதைகள்


முன்பு ஒரு காலத்தில் கிராமத்தில் நாய் குட்டி ஒன்று இருந்தது. அந்த நாய்க்குட்டி தினமும் காலையில் வீடுகளுக்குப் பின்னால் சென்று அங்கே கிடைக்கும் உணவுகளை உண்டு வந்தது. 
ஒருநாள் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒரு பெரிய எலும்புத் துண்டு கிடைத்தது.

அதை எடுத்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி சந்தோஷமாக வீடு நோக்கி சென்றது. வீடு செல்ல ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலத்தின் மீது நடந்து செல்லும்போது அந்த நாய் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரை எட்டிப்பார்த்தது. அதில் அதனுடைய உருவம் அங்கே தெரிந்தது.


அதன் உருவத்தைக் கண்ட நாய் குட்டி, ‘தண்ணீரில் வேறு ஏதோ ஒரு நாய் இருப்பதாகவும், அதன் வாயில் பெரிய எலும்புத் துண்டு இருப்பதாகவும் எண்ணியது. எப்படியாவது அந்த எலும்புத்துண்டை வாங்க வேண்டும் என்று தண்ணீருக்குள் குதித்தது’.

தண்ணீரில் குதித்த பிறகு தான் அங்கே வேறு நாயும் இல்லை எந்த எலும்புத்துண்டும் இல்லை, என்று அந்த நாய்க்குட்டிக்கு  புரிந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி எப்படியோ பல நேரப் போராட்டத்திற்குப் பிறகு கரையை எட்டியது. 


அந்த நாய்க்குட்டி வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்து விட்டது. கரையை எட்டிய பின்பு நாய் தன் செயலை நினைத்து மிகவும் வருத்தப்பட்டது. மீண்டும் தன் உணவைத் தேடி அலைய வேண்டும் என்று வருத்தத்துடன் சென்றது.


நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.

இயற்கை கவிதை (Nature Poem)

                                     இயற்கையின் கவிதைகள்



இயற்கையின் அழகு

இயற்கை அமுதம்
மழைத் துளிகள் விழ,
மண் மழை வாசம் பரப்ப,
பச்சை செடியின் இலைகள்
கொஞ்சம் கொஞ்சமாக அடர,
பூமி தன்னை அடைத்து,
புதுமை மொட்டாய் மலரும்!

மாலை நேரம்

சூரியன் மறைந்து,
மரங்கள் நிழல் கொண்டபோது,
மாலை நேரம் வீசும் காற்றில்,
பூக்கள் வாசம் பரவ,
அந்த நேரம் உணர்கிறது
இயற்கையின் அமைதியை.

கடல்

கடல் அலையடித்து,
கரைகளை முத்தமாக அடைந்ததும்,
மயக்கும் அலைகள்,
இயற்கையின் இசையாக,
கடலின் நெஞ்சில்
சுகமான உறக்கம்!

மழை

கறுப்பு மேகம் கூடி,
மின்னல் ஒளி ஜொலிக்க,
மழை தூறல் போட,
வீழும் துளியில்
சொர்க்கத்தின் குளிர்ச்சி,
தரையில் பூக்கும் மகிழ்ச்சி!


மலைகள்
மலைகள் எனது கண்ணின் முன்னே,
உயர்ந்து நிற்பது போல,
அழகான நினைவுகள்,
என் இதயத்தில்,
உயர்ந்து நிற்கின்றன,
மலைகள் போலவே மண்ணுக்குள்,
புரண்டாலும்,
அவற்றின் அழகு அழிவதில்லை.


பூக்கள்
பூக்கள் பேசாமலேயே பேசுகின்றன,
அவைகளின் வண்ணங்களும் மணமும்,
காற்றில் கலந்துவிடும் போது,
அன்பும் அமைதியும்,
எங்கும் பரவி விடும்.

Monday, August 26, 2024

தன்னம்பிக்கை உள்ள தவளை | தமிழ் கதைகள் | Self Confidence Of The Frog | Tamil Stories

தமிழ் கதைகள் 


ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மழை வந்தது. அப்போது பெரிய தவளை, “நண்பா மிகவும் மழை பெய்கிறது எனவே எங்கேயாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்” என்றது.

அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழையில் இருந்து ஒதுங்க அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின் சமயல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன.

திடீரென்று நிலைதடுமாறி  நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. முயற்சியிலிருந்து தோல்வியடைந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது.

இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது. மற்ற தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு இருந்ததால் கடைந்த மோரில் வருவது போல பாலில் இருந்து மேலே வெண்ணெய் வந்தது. அதிசயப்பட்ட தவளை மீண்டும் முயற்சியை தொடர்ந்தது.

          

அதனால் கடினமான வெண்ணை மேலே வந்தது. தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து பாதுகாப்பான இடம் தேடியது.

நீதி : முயற்சி திருவினையாக்கும்.

சிந்தித்து செயல்படு | தமிழ் கதைகள் | Think Before You Act | Moral Stories

                                                  தமிழ் கதைகள் முன்பு ஒரு காலத்தில் கிராமத்தில் நாய் குட்டி ஒன்று இருந்தது. அந்த நாய்க்குட்ட...